- வெள்ளை சென்னா(கொண்டைக்கடலை) - 200 கிராம்
- காய்ந்த மிளகாய் - மூன்று
- பட்டை - ஒரு அங்குலம் சைஸ்
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- இட்லி சோடா - ஒரு பின்ச்
- உப்பு - தேவைக்கு
- பூண்டு - இரண்டு பல்
- சின்ன வெங்காயம் - எட்டு
- பச்சை மிளகாய் - ஒன்று
- துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லி - சிறிது
- வெள்ளை சென்னாவை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறவைத்த சென்னாவை நன்கு களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
- முதலில் சோம்பு, காய்ந்த மிளகாய், பட்டையை திரித்து கொண்டு சென்னாவை கொஞ்சமாக போட்டு பூண்டு சேர்த்து நன்கு அரைக்கவும்.
- மீதியை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
- வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, உப்பு, சிறிது இட்லி சோடா கலந்து அரைத்த கலவையுடன் நன்கு கலக்கவும்.
- வடைகளாக சுட்டெடுக்கவும்
No comments:
Post a Comment