- ஆலு (உருளை) - இரண்டு
- கோபி (காலிஃப்ளவர்) - சிறிய பூ ஒன்று
- தாளிக்க:
- எண்ணெய் - 4 தேக்கரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - மூன்று
- கறிவேப்பிலை - சிறிது
- காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- பூண்டு பொடி(அ) பெருங்காயப்பொடி
- காலிஃப்ளவரை பெரிய பூக்களாக பிரித்தெடுக்கவும். உருளையையும் பெரிய துண்டுகளாக நறுக்கவும், ஒரு சட்டியில் வெந்நீரை கொதிக்க வைத்து கொஞ்சமாக உப்பு சேர்த்து காலிஃப்ளவரையும், உருளையையும் அதில் போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து வெந்நீரை வடித்துவிடவும்.
- ஒரு பெரிய வாணலியை காயவைத்து அதில் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- வடித்து வைத்த காலிஃப்ளவர் மற்றும் உருளையை சேர்த்து நன்கு கிளறவும்.
- மீண்டும் கிளறி மூடி போட்டு தீயின் அளவை குறைத்து வைத்து ஐந்து நிமிடம் வேகவிடவும்.
- பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் சேர்த்து (பெருங்காய பொடி (அ) பூண்டு பொடி ஒரு சிட்டிகை தூவி மீண்டும் ஐந்து நிமிடம் வேக விடவும்.
- கடைசியாக தீயின் அளவை அதிகப்படுத்தி மொறுகலாக வறுத்து அடுப்பை அணைக்கவும்.
- சுவையான காரசாரமான ஆலு கோபி ரெடி.
No comments:
Post a Comment