Tuesday, August 30, 2011

ஆலு கோபி ப்ரை(Alu Gopi Fry)

  • ஆலு (உருளை) - இரண்டு
  • கோபி (காலிஃப்ளவர்) - சிறிய பூ ஒன்று
  • தாளிக்க‌:
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • க‌டுகு ‍ - அரை தேக்க‌ர‌ண்டி
  • உளுத்த‌ம்ப‌ருப்பு - ஒரு தேக்க‌ர‌ண்டி
  • காய்ந்த‌ மிள‌காய் - மூன்று
  • க‌றிவேப்பிலை - சிறிது
  • காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேக்க‌ர‌ண்டி
  • ம‌ஞ்ச‌ள் தூள் - கால் தேக்க‌ர‌ண்டி
  • உப்பு - தேவைக்கு
  • பூண்டு பொடி(அ) பெருங்காயப்பொடி
  • காலிஃப்ளவ‌ரை பெரிய‌ பூக்க‌ளாக‌ பிரித்தெடுக்க‌வும். உருளையையும் பெரிய‌ துண்டுக‌ளாக‌ ந‌றுக்க‌வும், ஒரு ச‌ட்டியில் வெந்நீரை கொதிக்க‌ வைத்து கொஞ்ச‌மாக‌ உப்பு சேர்த்து காலிஃப்ளவ‌ரையும், உருளையையும் அதில் போட்டு ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைத்து வெந்நீரை வ‌டித்துவிட‌வும்.
  • ஒரு பெரிய‌ வாணலியை காய‌வைத்து அதில் எண்ணெய், க‌டுகு, உளுத்தம்ப‌ருப்பு, காய்ந்த ‌மிள‌காய், க‌றிவேப்பிலை சேர்த்து தாளிக்க‌வும்.
  • வ‌டித்து வைத்த‌ காலிஃப்ளவ‌ர் ம‌ற்றும் உருளையை சேர்த்து ந‌ன்கு கிளற‌வும்.
  • மீண்டும் கிள‌றி மூடி போட்டு தீயின் அளவை குறைத்து வைத்து ஐந்து நிமிட‌ம் வேக‌விட‌வும்.
  • பிற‌கு மிள‌காய் தூள், ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு தூள் சேர்த்து (பெருங்காய‌ பொடி (அ) பூண்டு பொடி ஒரு சிட்டிகை தூவி மீண்டும் ஐந்து நிமிட‌ம் வேக‌ விட‌வும்.
  • க‌டைசியாக‌ தீயின் அள‌வை அதிக‌ப்ப‌டுத்தி மொறுக‌லாக‌ வ‌றுத்து அடுப்பை அணைக்க‌வும்.
  • சுவையான‌ கார‌சார‌மான‌ ஆலு கோபி ரெடி.

No comments:

Post a Comment