- காய்கறிகள் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
- நறுக்கி வைத்திருக்கும் காய்களை குக்கரில் அல்லது மைக்ரோவேவில் உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அதனுடன் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வதக்கியவற்றை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும்.
- அதில் அரைத்த விழுதை ஊற்றி கொதிக்க விடவும். அதனுடனேயே பனீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- அதனுடனேயே பனீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- பனீர் நன்கு வேக, கடாயை தட்டை வைத்து மூடி கொதிக்க விடவும்.
- இப்பொழுது வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் காய்களை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
- சுவையான ஆரோக்கியம் நிறைந்த பனீர் மின்ட் கறி ரெடி.
No comments:
Post a Comment