- ஆட்டு ஈரல் - கால் கிலோ
- வெங்காயம் - இரண்டு (பெரியது)
- தக்காளி - 1 1/2 + பாதி (பெரியது)
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
- எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
- மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- தனியா தூள் - கால் தேக்கரண்டி
- உப்பு - அரை தேக்கரண்டி (தேவைக்கு)
- கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி (பட்டை, ஏலம், கிராம்பு)
- பச்சைமிளகாய் - ஒன்று
வாயகன்ற வாணலி ஒன்றில் ஒரு மேசைகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
லேசாக இஞ்சி பூண்டு விழுது நிறம் மாறியதும் பொடியாக நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கின ஒன்றரை தக்காளியை சேர்த்து கிளறவும், மீதி உள்ள பாதி தக்காளியை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.
தக்காளி வதங்கியதும் சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைத்துள்ள ஈரலை சேர்க்கவும். ஈரல் சேர்த்ததும் ஒரு நிமிடம் நன்கு ஒரு சேர கிளறவும்.
மசாலா வகைகள் (மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, கரம்மசாலா) அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு நிமிடம் முடி போட்டு சிம்மில் வைக்கவும்.
கடைசியாக அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் மீதமுள்ள எண்ணெயை சேர்த்து நன்கு கிளறவும்
தீயின் அளவை குறைத்து வைத்து மூன்று நிமிடம் கிரேவியை திக்காக விடவும்.அதிக நேரம் வைத்து ஈரலை வேக வைத்தால் ரொம்ப கட்டியாகிடும்.
சுவையான ஆட்டு ஈரல் கிரேவி ரெடி.
No comments:
Post a Comment