Tuesday, April 13, 2010

ஈஸி சாம்பார் ரைஸ்

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – 2 கப்
  • துவரம் பருப்பு – 1 கப்
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • கருவேப்பில்லை – 4 இலை
  • குடைமிளகாய் – 1
  • காரட் – 100 கிராம்
  • முள்ளங்கி – 100 கிராம்
  • நெய் – 1 மேஜை கரண்டி
  • எண்ணெய் – 2 தே.கரண்டி
  • சாம்பார் பொடி – 2 தே.கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
  • -----------------------
  • தாளிக்க:
  • -----------------------
  • கடுகு – 1/2 தே.கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 2

செய்முறை

  • முதலில் வெங்காயம் , தக்காளி அரிந்து கொள்ளவும். காய்களை ஓரே அளவாக வெட்டி கொள்ளவும்.
  • புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
  • பிரஸர் குக்க்ரில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  • பின் அதில் வெங்காயம் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  • அதன் பின் ஒரே அளவில் வெட்டி வைத்துள்ள காய்களை போட்டு வதக்கவும்.
  • அதன் பின் அரிசி , துவரம் பருப்பு,கரைத்து வைத்துள்ள புளி,தக்காளி , சாம்பார் பொடி ,உப்பு மற்றும் 4 கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கிளறி 2 -3 விசில் வரும் வரை வேகவிடவும்.
  • கடைசியில் பிரஸர் அடங்கியதும் நெய் சேர்த்து சுடாக பரிமாறவும்.
  • இப்பொழுது சுவையான ஈஸி சாம்பார் ரைஸ் ரெடி. இத்துடன் அப்பளம் அல்லது வறுவலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

கொத்தமல்லி சாதம்

தேவையான பொருட்கள்

  • சீரகம் -- 1 1/2 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் -- 1 1/2 கப் (நீளமாக நறுக்கியது)
  • நெய் -- 1/2 கப்
  • முந்திரி பருப்பு -- 25 என்னம் (பாதியாக உடைத்துக்கொள்ளவும்)
  • அரிசி -- 1 1/2 கப்
  • அரைக்க :
  • கொத்தமல்லி தழை -- 1 கட்டு
  • பூண்டு -- 5 என்னம்
  • உப்பு -- ருசிக்கேற்ப
  • பச்சை மிளகாய் -- காரத்திற்கேற்ப

செய்முறை

  • அரிசியை முதலில் சாதமாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய்யை ஊற்றி சீரகத்தை தாளித்து பின் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.
  • அரைக்க கொடுத்தவற்றை அரைக்கவும்.
  • அரைத்த மசாலாவை வாணலியில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • நெய் அப்படியே மேலே வரும்...
  • இதனிடையே மீதி உள்ள நெய்யில் எல்லா முந்திரிகளையும் வறுக்கவும்.
  • வறுத்தவைகளில் பாதியை சாதத்துடன் கலந்து வைக்கவும்.
  • இதனை மசாலாவுடன் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
  • பின் மீதி உள்ள முந்திரியை மேலே தூவி பறிமாறவும்.\
  • ரிச்சான கொத்தமல்லி சாதம் ரெடி.

இட்லி பொடி சாதம்

தேவையான பொருட்கள்

  • சாதம் – 1 கப்
  • இட்லி பொடி – 2 மேஜை கரண்டி
  • ---------------------------------
  • தாளிக்க:
  • ---------------------------------
  • நல்லெண்ணெய் – 2 தே.கரண்டி
  • கடுகு – தாளிக்க
  • கடலை பருப்பு – 1 தே.கரண்டி
  • கருவேப்பில்லை – 4 இலை

செய்முறை

  • முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பின் கடலை பருப்பு சேர்த்து வறுத்து கடைசியில் கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.
  • தாளித்த பொருட்களை சாதம் மற்றும் இட்லி பொடியுடன் சேர்த்து கிளறவும்.
  • இப்பொழுது சுவையான இட்லி பொடி சாதம் ரெடி.

கிரீன் ரைஸ்

தேவையான பொருட்கள்

  • கீரை - ஒரு கட்டு
  • கொத்தமல்லி - இரண்டு கைப்புடி
  • புதினா - ஒரு கைப்புடி(தேவைப்பட்டால்)
  • பீன்ஸ் - ஒரு கப்
  • பச்சை பட்டாணி - அரை கப்(தேவைப்பட்டால்)
  • பெருங்காயம் - இரண்டு பின்ச்
  • மிளகாய் வற்றல் - மூன்று
  • சாதம் - ஒன்றரை கப் (அல்லது)இரண்டு கப்
  • தாளிப்பதற்கு:
  • கடுகு
  • கடலை பருப்பு
  • உளுத்தம்பருப்பு
  • நிலக்கடலை
  • கறிவேப்பிலை
  • முந்திரி

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொத்தமல்லி,கீரை,புதினா ,உப்பு போட்டு நன்கு வேக விடனும்.
  • *அடுப்பில் இனொரு பாத்திரத்தில் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணியை வேக விடனும்.
  • *கீரை கலவை மற்றும் பீன்ஸ் கலவை வெந்ததும் கீரை கலவையை மிக்சரில் போட்டு நீர் விடாமல் அரிது எடுக்கவும்.
  • *ஒரு கடையில் சிறிது ஆயில் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பெருங்காயம்,பீன்ஸ் மற்றும் பட்டாணி போட்டு வதக்கி கீரை கலவையை அதில் கொட்டவும்.
  • *இரண்டு நிமிடம் வதக்கி சாதம் சேர்த்து இறக்கவும்.

தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்

  • உதிரியாக வடித்த சாதம் - 1கப்
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 3
  • பச்சை மிளகாய் - 1
  • கறிவேப்பிலை சிறிது,
  • கடுகு உளுந்து - 1/2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
  • உப்பு
  • எண்ணெய் தாளிக்க
  • வறுத்து அரைக்க:-(தண்ணிர் சேர்க்காமல் பொடியை போல்)
  • தனியா - 1 ஸ்பூன்
  • கடலை பருப்பு - 1ஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 2
  • தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

செய்முறை

  • வெங்காயம் தக்காளி,பச்சை மிளகாய் நீளமாக நறுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து வெங்காய்ம் கறிவேப்பிலை ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்,
  • பிறகு தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்
  • மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி வறுத்து பொடித்த தூளை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கவும்,
  • சாதத்தினை சேர்த்து நன்றாக கிளறி பறிமாறவும்

தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்

  • உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
  • எண்ணை - 2 ஸ்பூன்
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
  • இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது அல்லது துருவியது
  • பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது
  • கறிவேப்பிலை - 6 இலைகள்
  • முந்திரிப்பருப்பு - 6 பொடியாக நறுக்கியது
  • தேங்காய் துருவல் - 1/2 கப்

செய்முறை

  • எண்ணையை காயவைத்து அதில் கடுகு,உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம்,இஞ்சி& பச்சை மிளகாய்,முந்திரி பருப்பு,கறிவேப்பிலை சேர்த்து ஒரே ஒரு நிமிடம் வதக்கவும்..எதுவும் நிறம் மாற தேவையில்லை
  • பிறகு தீயை அனைத்து விட்டு உடன் தேங்காய் துருவல் சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்

குறிப்பு:

இதற்கு வறுவல் வகைகள் நல்ல காம்பினேஷன்.இதில் வெங்காயம்,இஞ்சி யெல்லாம் அதிகம் வதங்காமல் கொஞ்சம் கரகரவென கடிக்கும் அளவு வதக்கினால் சுவையாக இருக்கும்

கேரட் சாதம்

தேவையான பொருட்கள்

  • வடித்த சாதம் - இருவருக்கான அளவு
  • கேரட் - 3 பெரியது
  • வெங்காயம் பெரியது - 2 பொடியாக நறுக்கியது
  • தேங்காய் துருவல் - 3/4 கப்
  • பச்சை மிளகாய் - 2 அல்லது 3
  • தேங்காய் எண்ணை - 3 ஸ்பூன்
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

  • கேரட்டை துருவிக் கொள்ளவும்.தேங்காயையும் பச்சை மிளகாயையும் தண்ணீரில்லாமல் அரைத்துக் கொள்ளவும்
  • தேங்காய் எண்ணை காயவைத்து அதில் கடுகு,கறுவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  • பின் கேரட்டை கொட்டி உப்பு 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறி 3 நிமிடம் குறைந்த தீயில் இடையில் ஒரு முறை கிளறி விட எளிதில் வெந்து விடும்
  • பின் அரைத்த தேங்காயை கேரட்டுடன் கொட்டி ஒரு கிளறு கிளரி இறக்கவும்
  • அதனுடன் சாதத்தை கலந்து பரிமாறவும்

குறிப்பு:

3 நிமிடத்தில் இந்த சாதத்தை தயாரித்து விடலாம் ஆனால் சுவை அருமையாக இருக்கும்.லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்பலாம். இதனுடன் ஏதாவது வறுவல் ,வடகம் இருந்தால் நன்றாக இருக்கும்