Tuesday, April 13, 2010

அவசர தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்

  • தக்காளி - விழுது(1 கப்)மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • உப்பு - சிறிது
  • மிளகாய் தூள் - தேவையான அளவு
  • மஞ்சள் தூள் - சிறிது
  • கடுகு - சிறிது
  • பெருங்காயம் - சிறிது
  • கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,பெருங்காயம்,தக்காளி விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும். கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

குறிப்பு:

இட்லி,தயிர் சாதம் போன்ற வற்றிற்க்கு தொட்டு கொள்ள ஏற்றது.

புதினா சட்னி

தேவையான பொருட்கள்

  • புதினா - 1 கட்டு
  • தக்காளி - 1
  • பச்சை மிளகாய் - 5
  • உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • புதினாவை நன்கு சுத்தம் செய்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். பிறகு பச்சை மிளகாயை வதக்கவும்.
  • புதினா இலையை சிரதளவுக்கு கூட தண்ணீர் இல்லாமல் தனியாக வதக்கவும்.
  • அதன் பின்னர் தக்காளியை தனியாக வதக்கவும்.
  • எல்லாம் ஆறியபின் பருப்பு, மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். அதன் பின் புதினா சேர்த்து அரைக்கவும். கடைசியாக தக்காளி சேர்த்து அரைக்கவும்.

குறிப்பு:

புளிக்கு பதிலாக தக்காளி செற்பதால் சுவையும் கூடும் பார்பதற்கு நன்கு பச்சை கலராக இருக்கும்

முள்ளங்கி சட்னி

தேவையான பொருட்கள்

  • முள்ளங்கி - 1 கப்
  • எண்ணெய் - சிறிது
  • கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 3
  • புளி - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கேற்ப
  • பச்சை மிளகாய் - 8
  • தேங்காய் துறுவல் - 3 தேக்கரண்டி
  • கருவேப்பிலை - சிறிது
  • கடுகு - சிறிது

செய்முறை

  • கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பு,வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தக்காளி,புளி,உப்பு,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் முள்ளங்கி சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் தெளித்து விட்டு மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.
  • பின் தேங்காய் துறுவல்,கருவேப்பிலை சேர்த்து வதக்கி ஆரிய பின் மிக்ஸியில் அரைக்கவும்.
  • பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கருவேப்பிலை தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.

குறிப்பு:

சாதத்தில் நல்லெண்ணெயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

தக்காளி வெங்காய சட்னி:

தேவையான பொருட்கள்

  • சின்ன வெங்காயங்கள்- ஒரு கை
  • தக்காளி[பொடியாக அரிந்தது]- 2 கப்
  • உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
  • கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்
  • வற்றல் மிளகாய்-7
  • புளி- ஒரு நெல்லிக்காயளவு
  • கொத்தமல்லி இலை-அரை கப்
  • தேங்காய்த்துருவல்- கால் கப்
  • பூண்டிதழ்கள்-5
  • தேவையான உப்பு
  • தேவையான நல்லெண்ணெய்

செய்முறை

  • புளியை சிறிது நீரில் ஊறவைக்கவும்.
  • 4 ஸ்பூன் எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி சுடவைக்கவும்.
  • முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வற்றல் மிலகாய் இவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  • அதே எண்ணெயில் வெங்காயம், பூண்டு, தக்காளி இவற்றை குழைவாக வதக்கவும். அனனத்துப்பொருள்களுடனும் தேங்காய், கொத்தமல்லி, உப்பு, புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்

பொட்டட்டோ புலாவ்

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு - 1 பெரியது
  • பாசுமதி அரிசி - 300 கிராம்
  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • பட்டை - 1 துண்டு
  • பிரியாணி இலை - 1
  • ஏலம் -2
  • கிராம்பு - 2(விருப்பப்பட்டால்)
  • சோம்பு - கால்ஸ்பூன்(விருப்பப்பட்டால்)
  • வெங்காயம் - 1
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • தண்ணீர் - அரை லிட்டர்
  • மல்லி இலை - கொஞ்சம் அலங்கரிக்க.

செய்முறை

  • அரிசி கழைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.வெங்காயம்,உருளை தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாய் கட் செய்யவும்.மல்லி இலை பொடியாக கட் செய்யவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,பட்டை,பிரியாணி இலை,சோம்பு,ஏலம்,கிராம்பு,வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • பின்பு இஞ்சி பூண்டு,மஞ்சல்,உப்பு,உருளை சேர்த்து வதக்கி அளவுத்தண்ணீர் சேர்த்து அரிசி போட்டு மூடி விடவும்.
  • நன்றாக கொதிவந்ததும் சிம்மில் வைத்து 15-20 நிமிடம் வைக்கவும்.
  • வெந்த பின்பு 5-10 நிமிடம் கழித்து திறந்து மல்லி இலை தூவி பரிமாறவும்.
  • சுவையான காஷ்மீரி பொட்டட்டோ புலாவ் ரெடி.

ராயல் தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்

  • சாதம் – 2 கப்
  • தேங்காய் – ½ முடி
  • சின்ன வெங்காயம் - 4
  • பச்சை மிளகாய் – 3
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு
  • உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
  • கடலை பருப்பு – ½ தே.கரண்டி
  • கருவேப்பில்லை – 4 இலை
  • உப்பு – 1 தே.கரண்டி
  • தேங்காய் எண்ணெய் – 2 தே.கரண்டி
  • முந்திரி – 10

செய்முறை

  • முதலில் வெங்காயத்தினை வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும்.
  • தேங்காயினை துறுவி கொள்ளவும்.
  • ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து பின் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.
  • அதன் பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  • நன்றாக வதங்கிய பிறகு உப்பு ,இஞ்சி சேர்த்து துறுவி வைத்துள்ள தேங்காயினையும் சேர்த்து 2 – 3 நிமிடம் வதக்கவும்.
  • கடைசியில் சாதத்துடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • இப்பொழுது சுவையான தேங்காய் சாதம் ரெடி.

கீரை சாதம் (குழந்தைகளுக்கு)

தேவையான பொருட்கள்

  • 1. அரிசி - 1/2 கப்
  • 2. ஸ்பினாச் - 1/2 கட்டு
  • 3. வெங்காயம் - 1/2
  • 4. பூண்டு - 5 பல்
  • 5. இஞ்சி
  • 6. கரம் மசாலா தூள் - 1/4 - 1/2 தேக்கரண்டி
  • 7. மிளகாய் வற்றல் - 2
  • 8. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
  • 9. உப்பு

செய்முறை

  • ஸ்பினாச் பொடியாக நறுக்கி தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  • குழைய வரவில்லை என்றால் ப்லென்டரில் லேசாக அடித்து வைக்கவும். (கீரை வேக வைத்த தண்ணீரிலேயே செய்யவும்)
  • அரிசியை 3/4 கப் தண்ணீர் ஊற்றி 3/4 பங்கு வேக வைக்கவும்.
  • வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல் மூன்றையும் ப்லென்டரில் போட்டு அடிக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காய மசாலா, கரம் மசாலா, மல்லி தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக வதக்கவும்.
  • இதை கீரையில் சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதி விடவும்.
  • பின் 3/4 வெந்த சாதம் சேர்த்து மூடி நன்றாக சாதம் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு:

இது சத்தானது. கூடவே வெங்காயம் பூண்டு அரைத்து சேர்ப்பதால் குழந்தைகள் எடுத்து விட மாட்டார்கள். கீரை சேர்த்து சாதம் வேக வைப்பதால் ருசியாக இருக்கும். விரும்பினால் இதில் பொடியாக நறுக்கிய கேரட் கூட சேர்க்கலாம்