தேவையான பொருட்கள்- 1. அரிசி - 1/2 கப்
- 2. ஸ்பினாச் - 1/2 கட்டு
- 3. வெங்காயம் - 1/2
- 4. பூண்டு - 5 பல்
- 5. இஞ்சி
- 6. கரம் மசாலா தூள் - 1/4 - 1/2 தேக்கரண்டி
- 7. மிளகாய் வற்றல் - 2
- 8. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
- 9. உப்பு
|
செய்முறை- ஸ்பினாச் பொடியாக நறுக்கி தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
- குழைய வரவில்லை என்றால் ப்லென்டரில் லேசாக அடித்து வைக்கவும். (கீரை வேக வைத்த தண்ணீரிலேயே செய்யவும்)
- அரிசியை 3/4 கப் தண்ணீர் ஊற்றி 3/4 பங்கு வேக வைக்கவும்.
- வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல் மூன்றையும் ப்லென்டரில் போட்டு அடிக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காய மசாலா, கரம் மசாலா, மல்லி தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக வதக்கவும்.
- இதை கீரையில் சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதி விடவும்.
- பின் 3/4 வெந்த சாதம் சேர்த்து மூடி நன்றாக சாதம் வேக வைத்து எடுக்கவும்.
|
குறிப்பு:
இது சத்தானது. கூடவே வெங்காயம் பூண்டு அரைத்து சேர்ப்பதால் குழந்தைகள் எடுத்து விட மாட்டார்கள். கீரை சேர்த்து சாதம் வேக வைப்பதால் ருசியாக இருக்கும். விரும்பினால் இதில் பொடியாக நறுக்கிய கேரட் கூட சேர்க்கலாம்