தேவையான பொருட்கள்- புதினா - 1 கட்டு
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 5
- உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
|
செய்முறை- புதினாவை நன்கு சுத்தம் செய்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். பிறகு பச்சை மிளகாயை வதக்கவும்.
- புதினா இலையை சிரதளவுக்கு கூட தண்ணீர் இல்லாமல் தனியாக வதக்கவும்.
- அதன் பின்னர் தக்காளியை தனியாக வதக்கவும்.
- எல்லாம் ஆறியபின் பருப்பு, மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். அதன் பின் புதினா சேர்த்து அரைக்கவும். கடைசியாக தக்காளி சேர்த்து அரைக்கவும்.
|
குறிப்பு:
புளிக்கு பதிலாக தக்காளி செற்பதால் சுவையும் கூடும் பார்பதற்கு நன்கு பச்சை கலராக இருக்கும்
No comments:
Post a Comment