Tuesday, April 13, 2010

பொட்டட்டோ புலாவ்

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு - 1 பெரியது
  • பாசுமதி அரிசி - 300 கிராம்
  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • பட்டை - 1 துண்டு
  • பிரியாணி இலை - 1
  • ஏலம் -2
  • கிராம்பு - 2(விருப்பப்பட்டால்)
  • சோம்பு - கால்ஸ்பூன்(விருப்பப்பட்டால்)
  • வெங்காயம் - 1
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • தண்ணீர் - அரை லிட்டர்
  • மல்லி இலை - கொஞ்சம் அலங்கரிக்க.

செய்முறை

  • அரிசி கழைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.வெங்காயம்,உருளை தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாய் கட் செய்யவும்.மல்லி இலை பொடியாக கட் செய்யவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,பட்டை,பிரியாணி இலை,சோம்பு,ஏலம்,கிராம்பு,வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • பின்பு இஞ்சி பூண்டு,மஞ்சல்,உப்பு,உருளை சேர்த்து வதக்கி அளவுத்தண்ணீர் சேர்த்து அரிசி போட்டு மூடி விடவும்.
  • நன்றாக கொதிவந்ததும் சிம்மில் வைத்து 15-20 நிமிடம் வைக்கவும்.
  • வெந்த பின்பு 5-10 நிமிடம் கழித்து திறந்து மல்லி இலை தூவி பரிமாறவும்.
  • சுவையான காஷ்மீரி பொட்டட்டோ புலாவ் ரெடி.

No comments:

Post a Comment