Tuesday, April 13, 2010

புதினா துவையல்

தேவையானப் பொருட்கள்

  • புதினா - ஒரு கட்டு
  • தேங்காய் - அரை மூடி
  • மிளகாய் வற்றல் - 12
  • புளி - சிறு நெல்லிக்காய் அளவு
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
புதினா இலைகளை ஆய்ந்து கொண்டு தண்ணீரில் அலசிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு போட்டு 30 நொடி சிவக்க வறுக்கவும்.
 
பருப்பு சிவந்ததும் கிள்ளி வைத்திருக்கும் மிளகாய் வற்றல் மற்றும் புளி போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்
ஒரு நிமிடம் கழித்து அலசி வைத்திருக்கும் புதினாவை போட்டு 2 நிமிடம் வதக்கவும். புதினா இலை லேசாக நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து எடுத்து ஆற விடவும்
 
வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு மிக்ஸியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். அதன் பின்னர் அரைத்த துவையலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் தாளித்த பொருட்களை கொட்டி கலந்துக் கொள்ளவும். 

இந்த துவையலை சாதத்துடன் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி மற்றும் தோசைக்கு கூட சேர்த்து சாப்பிடலாம்.

 
 
 

கத்தரிக்காய் துவையல்

தேவையான பொருட்கள்

  • கத்தரிக்காய் 4
  • உளுத்தம் பருப்பு 2 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் 6
  • உப்பு தேவையான அளவு
  • பெருங்காயம் சிறிதளவு
  • புளி - சுண்டைக்காய் அளவு
  • எண்ணெய் - 8 டீ ஸ்பூன்

செய்முறை

  • கத்தரிக்காயை நறுக்கிக் கொண்டு 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுத்து பெருங்காயத்தை நன்கு பொரித்துக் கொண்டு, அடுப்பை அணைத்துவிட்டு, அந்த வாணலியின் சூட்டிலேயே காய்ந்த மிளகாயைப் போட்டு வறுக்கவும்.
  • சூடு ஆறிய பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சுண்டைக்காய் அளவு புளி மற்றும் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். நீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
  • இதை சாதத்திற்குப் பிசைந்து சாப்பிடவும், தயிர் சாதம், மற்றும் தோசை இட்லி என அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள மிக அருமையாக இருக்கும்

கொத்தமல்லி இனிப்பு துவையல்

தேவையான பொருட்கள்

  • கொத்தமல்லி தழை -ஒரு கைபிடி
  • மிளகாய் வத்தல் - 5
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • வெல்லம் - 50கிராம்
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணெய் - 2ஸ்பூன்

செய்முறை

  • அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் புளி,வத்தலை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவேண்டும்.
  • அதே எண்ணெயில் நன்றாக கழுவி நறுக்கிய கொத்தமல்லித்தழையை போட்டு வதக்கி எடுத்து கொள்ளவேண்டும்.
  • பின்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து இரண்டு சுற்று சுற்றவிட்டு பின் 50கிராம் வெல்லத்தை அதனுடன் சேர்த்து நைசாக அரைத்து எடுக்க வேண்டும்.
  • இதை இட்லி,தோசைக்கு பரிமாறலாம்.

கார சட்னி

தேவையான பொருட்கள்

  • 1. வெங்காயம் - 1
  • 2. தக்காளி - 1
  • 3. கொத்தமல்லி இலை - 1/4 கப்
  • 4. உப்பு - தேவைக்கு
  • 5. மிளகாய் வற்றல் - 2
  • 6. தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி

செய்முறை

  • வெங்காயம், தக்காளி சிறிதாக நறுக்கவும்.
  • கடாயில் எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து எடுக்கவும்.
  • இத்துடன் கொத்தமல்லி, உப்பு, தேவைக்கு தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும்.

குறிப்பு:

இட்லி, தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

கொத்தமல்லி சட்னி

தேவையான பொருட்கள்

  • கொத்தமல்லிகீரை -1கட்டு
  • சின்னவெங்காயம் -10
  • தனியா -1ஸ்பூன்
  • சீரகம் -1/4ஸ்பூன்
  • காய்ந்தமிளகாய் -1
  • பூண்டு -2பல்
  • இஞ்சி -1சிறுதுண்டு
  • தேங்காய் துறுவல் -1/4கப்
  • பொட்டுகடலை -1ஸ்பூன்
  • புளி -சிறிது
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணை -1ஸ்பூன்

செய்முறை

  • கொத்தமல்லிகீரையை சுத்தம்செய்து அலசி வைக்கவும்.
  • வெங்காயம்,பூண்டு தோல் உரித்துவைக்கவும்.
  • இஞ்சியை சுத்தம் செய்து வைக்கவும்.
  • வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி தனியா,சீரகம்,பூண்டு,இஞ்சி,காய்ந்தமிளகாய் போட்டு நன்குவதக்கவும்.
  • கொத்தமல்லி கீரை போட்டு நன்கு சுருள வதக்கவும்.தேங்காய் துறுவல்,பொட்டுகடலை,புளி,உப்பு போட்டு வதக்கி ஆறவைக்கவும்.
  • ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  • சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி.

குறிப்பு:

சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.இட்லி,தோசைக்கும் நன்றாக இருக்கும்.காரம் வேண்டுமென்றால் மிளகாய் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்

அவசர தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்

  • தக்காளி - விழுது(1 கப்)மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • உப்பு - சிறிது
  • மிளகாய் தூள் - தேவையான அளவு
  • மஞ்சள் தூள் - சிறிது
  • கடுகு - சிறிது
  • பெருங்காயம் - சிறிது
  • கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,பெருங்காயம்,தக்காளி விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும். கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

குறிப்பு:

இட்லி,தயிர் சாதம் போன்ற வற்றிற்க்கு தொட்டு கொள்ள ஏற்றது.

புதினா சட்னி

தேவையான பொருட்கள்

  • புதினா - 1 கட்டு
  • தக்காளி - 1
  • பச்சை மிளகாய் - 5
  • உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • புதினாவை நன்கு சுத்தம் செய்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். பிறகு பச்சை மிளகாயை வதக்கவும்.
  • புதினா இலையை சிரதளவுக்கு கூட தண்ணீர் இல்லாமல் தனியாக வதக்கவும்.
  • அதன் பின்னர் தக்காளியை தனியாக வதக்கவும்.
  • எல்லாம் ஆறியபின் பருப்பு, மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். அதன் பின் புதினா சேர்த்து அரைக்கவும். கடைசியாக தக்காளி சேர்த்து அரைக்கவும்.

குறிப்பு:

புளிக்கு பதிலாக தக்காளி செற்பதால் சுவையும் கூடும் பார்பதற்கு நன்கு பச்சை கலராக இருக்கும்